» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஞாயிறு 5, மே 2024 12:25:09 PM (IST)



கோவில்பட்டியில் ஜேசிஐ, அரவிந்த் கண் மருத்துவமனை, ஆசியா பார்ம்ஸ் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

கோவில்பட்டி ஆசியாபார்ம்ஸ் நிறுவன வளாகத்தில் கடந்த இலவச கண் பரிசோதனை முகாமிற்கு ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். பல் மருத்துவர் விஜய்,ஜேசிஐ முன்னாள் தலைவர்கள் ராஜ்குமார், லட்சுமி விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஆசியா பார்ம்ஸ் உரிமையாளர் பாபு அனைவரையும் வரவேற்றார்.

புதுச்சேரி ராஜீவ் காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரோசரியா கலந்து கொண்டு கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார். கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் வினோதினி பிரியா கலந்துகொண்டு 150 க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்தார்.

இதில் ஜேசிஐ நிர்வாகிகள், சூர்யா, ஷியாம், உதய லட்சுமி,ஸ்டீபன் நரேஷ், தினேஷ் பாபு,பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், மருத்துவர்கள் பெலிக்ஸ் மரி ஆஞ்சலோ, அலாய்சியா பாபு, கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஹரணி கிருஷ்ணா, முகாம் ஒருங்கினைப்பாளர் கந்தசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆசியா பார்ம்ஸ் நிறுவன பணியாளர் மெக்சிதா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory