» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தீக்குளித்து தற்கொலை!

புதன் 24, ஏப்ரல் 2024 10:58:19 AM (IST)

தூத்துக்குடியில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பிரையன்ட் நகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் ஜான்சன் (56), கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மது குடித்துவிட்டு வருவாராம். இதனை அவரது மனைவி மாரித்தாய் கண்டித்து உள்ளார். 

இதனால் மனமுடைந்த ஜான்சன் நேற்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory