» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது கார் மோதிய விபத்தில் சூப்பர்வைசர் பலி!

புதன் 24, ஏப்ரல் 2024 10:52:50 AM (IST)

எப்போதும்வென்றான் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் தனியார் எண்ணெய் மில் சூப்பர்வைசர் உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமசந்திரன் (63). இவர் எப்போதும்வென்றான் பகுதியில் உள்ள எண்ணெய் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

சோழபுரம் விலக்கு அருகே சென்றபோது, திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கார் அவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராமசந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிந்து காரை ஒட்டிவந்த ஆண்டிபட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் ஆனந்த் குமார் (63) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory