» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை!

புதன் 24, ஏப்ரல் 2024 10:44:57 AM (IST)

தட்டார்மடம் அருகே காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகேயுள்ள ராஜமன்னார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுயம்பு மகன் கோகுல் (23). இவர், நாசரேத்தில் உள்ள கல்லூரியில் பிகாம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தாராம். 

இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பெண் இவரது செல்போன் அழைப்பை எடுக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த கோகுல் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

போன்Apr 25, 2024 - 08:34:47 AM | Posted IP 162.1*****

எடுக்கல என்றால் சாவதா?

சந்திரன்Apr 24, 2024 - 11:01:11 AM | Posted IP 172.7*****

செல்போன் ரிப்பேர் அவசரப்பட்டு விட்டியே குமாரு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory