» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு : பக்தர்கள் குவிந்தனர்!!

புதன் 24, ஏப்ரல் 2024 8:43:29 AM (IST)



சித்ரா பவுர்ணமியையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத வசந்த திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி கிரிபிரகாரம் வலம் வந்து கோவிலை சேர்ந்தார்.

மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். அதன்படி நேற்று ஏராளமான பக்தர்கள் நேற்று காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவில் ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory