» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி பலி!

சனி 13, ஏப்ரல் 2024 11:07:08 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் மேல்மாந்தை மேல தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் வேலுச்சாமி (48). விவசாயி. இவர் நேற்று தனது மோட்டார் பைக்கில் கிழக்குக் கடற்கரை சாலையில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ஒரு வேன் இவரது பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) வெங்கடேச பெருமாள் வழக்கு பதிவு செய்து, அந்த வேனை ஓட்டிவந்த நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த செல்வின் மகன் கார்க்கில் (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory