» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: முதியவர் கைது

சனி 13, ஏப்ரல் 2024 10:17:23 AM (IST)

தூத்துக்குடியில் அவதூறாக பேசி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பொன்னாண்டி நகர் 4-வது தெருவை சேர்ந்த முருகன் மனைவி செல்வி (36). முருகன் ஓட்டப்பிடாரத்தில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது எதிர் வீட்டில் குடியிருந்து வரும் போஸ் (65) கடந்த 2 வருடங்களாக செல்வியிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் செல்வியின் வீட்டின் முன்பு போஸ் குப்பைகளை கொட்டியதாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட செல்வியை அவர் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப்பதிவு செய்து போஸை கைது செய்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory