» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை!

சனி 13, ஏப்ரல் 2024 8:58:10 AM (IST)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை 1ஆம் தேதியை முன்னிட்டு, நாளை சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை முதல் தேதியை முன்னிட்டு நாளை (ஏப்.14) ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணியளவில் தீா்த்தவாரி, தொடா்ந்து உச்சிகால அபிஷேகம் நடக்கிறது. 

காலை 10.30 மணிக்கு மேல் சண்முகருக்கு அன்னாபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகின்றன. இதே போல சித்திரை வசந்த விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, ஏப்.23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

திருக்கோயில் வளாகத்தில் வைத்து காலை 8 மணிக்கு நாகஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெறும். காலை 10.30 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்படுகிறது. மாலை 3 மணிக்கு இந்து துவக்கப் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழு தலைவா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், செந்தில்முருகன், ராமதாஸ், கணேசன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory