» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்.5ல் கொடியேற்றம்!!

வியாழன் 28, மார்ச் 2024 8:00:15 AM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நாட்கால் நடும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாட்கால் நடும் விழா நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவணந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. 

பின்னா் காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 11 மணிக்கு மேல் கோயில் முன்பு நாட்கால் நடும் விழா நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில்  உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory