» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்.5ல் கொடியேற்றம்!!
வியாழன் 28, மார்ச் 2024 8:00:15 AM (IST)
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நாட்கால் நடும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாட்கால் நடும் விழா நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவணந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.
பின்னா் காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 11 மணிக்கு மேல் கோயில் முன்பு நாட்கால் நடும் விழா நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனர்.