» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது : மது போதையில் வெறிச்செயல்!!

திங்கள் 29, ஏப்ரல் 2024 11:14:51 AM (IST)

தூத்துக்குடியில்  மது போதையில் தந்தையை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி திரவியபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் மாரியப்பன் (53). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சுடலை கணேஷ் (24), அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனை அவரது தந்தை மாரியப்பன் கண்டித்துள்ளார். 

இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மாரியப்பனை, அவரது மகன்  சுடலை கணேஷ் சரமாரியாக கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய சப்  இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப் பதிந்து, சுடலை கணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory