» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாய் குறுக்கே வந்ததால் பைக் விபத்து: வாலிபர் பலி!

திங்கள் 29, ஏப்ரல் 2024 11:08:21 AM (IST)

தூத்துக்குடி அருகே நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட பைக் விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மிளகுநத்தம் நடுத் தெருவைச் சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜ் மகன் மகாலிங்கம் (34), ராஜகோபால் மகன் சுரேந்தர் (19). இவர்கள் இருவரும் நேற்று ஒரே பைக்கில் சிவஞானபுரத்திற்கு சென்று காெண்டிருந்தனர். பைக்கை மகாலிங்கம் ஓட்டினார். சுரேந்தர் பின்னார் அமர்ந்திருந்தார்.

எப்போதும்வென்றான் அருகே வந்தபோது நாய் குறுக்கே பாய்ந்ததால் பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த சுரேந்தர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து எப்போதும்வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory