» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை!

திங்கள் 29, ஏப்ரல் 2024 11:22:29 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு விரைவு போக்குவரத்து கழக டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தன்னூத்து கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் சண்முகசுந்தரம் (55). இவர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். 

இவர் கடந்த ஒரு மாத காலமாக வேலைக்கு செல்வது இல்லையாம். இதனால் அவரது மனைவி முத்துமாரி கண்டித்தாராம். இதன் காரணமாக மனைவியுடன் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சண்முகசுந்தரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர பத்மநாப பிள்ளை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory