» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொத்தனாரை கரண்டியால் தாக்கியவர் கைது!

திங்கள் 29, ஏப்ரல் 2024 11:38:10 AM (IST)

தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை கரண்டியால் தாக்கிய மற்றொரு கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி கந்தசாமி புரத்தைச் சேர்ந்தவர் ஆண்டிமுத்து மகன் மாரிமுத்து (43), டி.எம்.பி., காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் காமராஜ் (43). இவர்கள் 2பேரும் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்கள். நேற்று வேலை முடிந்து கந்தசாமிபுரத்தில் வைத்து மது குடித்தார்களாம்.  அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த காமராஜ் மாரிமுத்துவை கொத்த வேலை செய்யும் கரண்டியால் சரமாரியாக தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் வட பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப் பதிந்து,  காமராஜை கைது செய்து  விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory