» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மூன்று புதிய கிளைகள் திறப்பு விழா
புதன் 27, மார்ச் 2024 7:54:29 PM (IST)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மூன்று புதிய கிளைகள் சென்னை கொளத்தூர், கோவை கோவில்பாளையம், மற்றும் கன்னியாகுமரி புத்தளம் ஆகிய பகுதிகளில் இன்று திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிட் ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி, பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், வங்கின் 550, 551 மற்றும் 552வது கிளைகளை கொளத்தூர்-சென்னை மாவட்டம், கோவில்பாளையம் - கோயம்புத்தூர் மாவட்டம், மற்றும் புத்தளம்-கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏடிஎம் வசதியுடன் இன்று காலை துவக்கியுள்ளது. இந்த மூன்று கிளைகளுடன் தமிழ்நாட்டில் உள்ள கிளைகளின் எண்ணிக்கை 406யை எட்டி உள்ளது.
கொளத்தூரில் 550வது கிளையை F.O.R. எலும்பியல் மற்றும் நரம்பியல் மருத்துவமனை, தலைவர் மற்றும் எலும்பியல் ஆலோசகர் டாக்டர் இளங்கோவன் துவக்கி வைத்தார். கோயம்புத்தூர் மாவட்டம் கோவில்பாளையத்தில் 551வது கிளையை பஞ்சாயத்து தலைவர் சுரேஷ்குமார், துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளத்தில் 552வது கிளையை தெங்கம்புதூர் வியாபாரிகள் சங்கம்தலைவர் குமரேசன், துவக்கி வைத்தார். விழாவில் வங்கியின் மண்டல மேலாளர், ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள்.
புதிய கிளைகள் திறப்பு குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், "பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று 550, 551 மற்றும் 552வது கிளைகளை கொளத்தூர், கோவில்பாளையம், மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் ஏடிஎம் வசதியுடன் இன்று துவக்கியுள்ளது.
மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறந்திட திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய கிளையின் துவக்க விழாவின் மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்றார்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு பெயர்பெற்ற பழைய தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியில் தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 552 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 50 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.