» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

த.வா.க. மாவட்ட செயலாளர் அதிமுகவில் ஐக்கியம்!

செவ்வாய் 26, மார்ச் 2024 7:43:42 AM (IST)

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிசெல்வம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான மாரிசெல்வம் தலைமையில் , தெற்கு மாவட்ட தலைவர் ரோபி பிரபாகரன், மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் ஆகாஷ் தினகரன் உள்ளிட்ட  10ம் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரமான எஸ்.பி சண்முகநாதன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

கட்சியில் இணைந்தவர்களை முன்னால் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் கழக துண்டு அணிவித்து வரவேற்றார். அந்நிகழ்வின் போது முன்னாள் அமைச்சரும் கழக வர்த்தக அணி செயலாளருமன சி.த செல்லபாண்டியன், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். சிவசாமி வேலுமணி,உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அதிமுக மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் பிரபு செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory