» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இன்று 6பேர் வேட்புமனு தாக்கல்!

திங்கள் 25, மார்ச் 2024 5:19:08 PM (IST)



தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளர், சுயேட்சைகள் உட்பட  6பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.  

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடைபெற உள்ளதை முன்னிட்டு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஆர்.பாலமுருகன், சுயேட்சை வேட்பாளர் எம்.பிரசன்ன குமார், அஇஅதிமுக வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி, அஇஅதிமுக மாற்று வேட்பாளர்  எஸ்.ஆனந்தி பிரபா ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

மேலும், மக்கள் நல்வாழ்வுக் கட்சி வேட்பாளர்  ரா.கலீர் முருக பாவேந்தன், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் வேட்பாளர்  என்.பிஷப் காட்பிரி வாஷிங்டன் நோபல் ஆகியோர் இன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதியிடம் தங்களது வேட்பு மனுவை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory