» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்: மாவட்ட செயலாளர் சண்முகநாதன் திறந்து வைத்தார்!

திங்கள் 29, ஏப்ரல் 2024 10:31:20 AM (IST)



ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஸ்ரீவை மேடைப்பிள்ளையார் கோவில் அருகே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமை வகித்தார். நகர செயலாளர் காசிராஜன், நகர துணை செயலாளர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவை நகர தகவல்தொழில்நுட்ப அணி செயலாளர் பொன்ராஜ் வரவேற்றார்.

விழாவில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், குளிர்பானங்கள் வழங்கினார். இதில், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் கருப்பசாமி, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் சொர்ணபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பொன்ராஜ், ரமேஷ், மாவட்ட பிரதிநிதி மீன்தங்கராஜ், கருங்குளம் ஒன்றிய செயலாளர் பரமசிவன், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல தலைவர் எட்வர்டுஅந்தோணிராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory