» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மோடி மீண்டும் பிரதமராக சிறப்பு பூஜை : திருச்செந்தூரில் நயினாா் நாகேந்திரன் பேட்டி
ஞாயிறு 24, மார்ச் 2024 10:09:36 AM (IST)
திருச்செந்தூா் கோயிலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ சிறப்பு யாகம் செய்து வழிபட்டாா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான நயினாா் நாகேந்திரன் தோ்தலில் வெற்றிபெற வேண்டி சத்ரு சம்ஹார யாகம், சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து வழிபட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் கூறும்போது, மக்களவைத் தோ்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று 3ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வருவதற்காக சிறப்பு பூஜை செய்து வழிபட்டேன் என்றாா்.