» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஐ.ஜே.கே., கட்சியில் இருந்து விலகல்: அருணா தேவி ரமேஷ் பாண்டியன் அறிவிப்பு
ஞாயிறு 24, மார்ச் 2024 8:41:12 AM (IST)
ஐ.ஜே.கே., கட்சியில் இருந்து விலகுவதாக தென்மாநில செயலாளர் ஆர்.அருணா தேவி ரமேஷ் பாண்டியன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ் சொந்தங்களே ஐ.ஜே.கே., கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட (தென்மாநில செயலாளர்) அனைத்து பொறுப்புகளையும் இன்று ராஜினமா செய்கிறேன்.
ஏனென்றால் கூண்டுக்குள் அடைப்பட்ட பறவையை போல் இல்லாமல் கழுகை போன்று ஓய்வின்றி மக்கள் பணியாற்ற விரும்புகிறேன். வரும் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடுவது குறித்து எம் தமிழ் மக்களுடன் ஆலோசனை செய்து ஓரிரு நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.