» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி ஆற்றில் மீன்கள் கணக்கெடுப்பு: பள்ளி மாணவ மாணவிகள் கள ஆய்வு

சனி 23, மார்ச் 2024 3:42:40 PM (IST)



உலக தண்ணீர் மற்றும் வானிலை தினங்களை முன்னிட்டு மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் தாமிரபரணி மீன்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 

இக்கணக்கெடுப்பை மணிமுத்தாறு ஏட்ரி - அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையம், பாளையங்கோட்டை சகத்துல்லா அப்பா கல்லூரி இணைந்து நடத்தி வருகிறார்கள். 

முதல் நாள் கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் கணக்கெடுப்பு தொடங்கியது. இரண்டாம் நாள் (23 மார்ச்) அன்று காலை 7 மணி தொடங்கி 9 மணி வரை 6 குழுக்களாக பிரிந்து பாபநாசம், திருப்புடைமருதூர், கோபாலசமுத்திரம், சீவலப்பேரி, கருங்குளம் மற்றும் திருவைகுண்டம் ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்பை நடத்தினார்கள்.

சீவலப்பேரியில் மீன்கள் கணக்கெடுப்பை நடத்திய பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யமந்திர் மாணவ மாணவிகள் 25 பேர் மருதூர் அணைக்கு வந்தனர். அவர்கள் மருதூர் அணைக்கட்டில் கீழக்கால்வாயில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் அணைக்கட்டு பகுதிக்குள் இறங்கி 4000 அடி நடந்தே மேலக்கால்வாய் பிரியும் பகுதிக்கு வந்தனர். வரும் வழியில் உள்ள ஆங்கிலேயர் காலத்து கல்வெட்டு, 13 ஆம் நூற்றாண்டு குலசேகரபாண்டிய மன்னரின் கல்வெட்டு மருதவல்லி, சோழவல்லி கோயிலின் முன்பு கிடந்த கல் சின்னங்களை பார்வையிட்டனர். 

அதன் பின் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். அவர் தாமிரபரணி தோன்றும் இடம், அங்கு செல்லும் பயணம், பொதிகை மலை காடுகள், நதியில் உள்ள அணைக்கட்டுகள், இயற்கை ஊற்றுகள் மருதூர் அணைக்கட்டு கல்வெட்டுகள் மற்றும் பேசப்படும் கதைகள். அணையின் வரலாறு உள்பட பல்வேறு தகவல்களை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார்.
 
இந்த நிகழ்ச்சியில் மணிமுத்தாறு ஏட்ரி - அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மைய ஆராய்ச்சியாளர்கள் மரிய ஆண்டனி, தணிகைவேல், தமிழழகன், அனிஷ், சஹானா, புஷ்பலதா வித்யமந்திர் ஆசிரியர்கள் வெங்கட் ராகவன், நிஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory