» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 1, டிசம்பர் 2022 11:40:54 AM (IST)
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் தலைமையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், உலக சுகாதார மையத்தின் சமப்படுத்துதல் கொள்கையின் படி சுமார் 150 மருத்துவ மாணவர்களுக்கு கூட்டு மருத்துவ சிகிச்சை முறை மற்றும் நோய் தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொது மருத்துவத்துறை தலைவர் மற்றும் ஏஆர்டி மைய நோடல் ஆபீசர் சரவணன், நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் மருத்துவர் ஜெயமுருகன், நெஞ்சக நோய் பிரிவு துறை தலைவர் சங்கமித்ரா, ஏஆர்டி மைய மருத்துவ அலுவலர்கள் குழந்தைராஜ், சூர்யா, மருத்துவமனை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, மற்றும் பல்வேறு துறை தலைவர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.