» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பலசரக்கு கடையில் புகையிலை விற்பனை : வியாபாரி கைது
சனி 27, ஏப்ரல் 2024 8:41:50 AM (IST)
தூத்துக்குடியில் பலசரக்கு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு ராஜூவ்நகர் நகரை சேர்ந்தவர் முருகன் (50). வியாபாரி. இவர் அத்திமரப்பட்டி ரோட்டில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் முத்தையாபுரம் போலீசார் கடையை சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் கடையிலிருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். இதேபோன்று, பசுவந்தனை வாசக சாலை தெருவை சேர்ந்த சண்முகம் மகன் கணேசன் மளிகை கடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி 10 கிலோ புகையிலை பொருட்களையும், குடோனில் இருந்த 50 கிலோ புகையிலையும் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.