» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டல் : 2பேர் கைது

சனி 27, ஏப்ரல் 2024 8:46:02 AM (IST)

தூத்துக்குடியில் வெவ்வேறு பகுதிகளில் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி 3 செண்ட் அந்தோணியார் புரத்தை சேர்நதவர் முருகன் என்ற ஓட்டப்பல் முருகன் (26). இவர் தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் நடந்து சென்ற கூலித் தொழிலாளி ஒருவரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினாராம். அவரிடம் இருந்து தப்பிய தொழிலாளி, இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் வழக்கு பதிவு செய்து ஓட்டப்பல் முருகனை கைது செய்தார்.

மற்றொரு சம்பவம்

இதேபோன்று, தூத்துக்குடி டூவிபுரம் 10-வது தெருவை சேர்ந்தவர் ராஜாமணி (31). இவர் வி.இ.ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அருகே வந்த முதியவர் ஒருவரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினாராம். அவரிடம் இருந்து தப்பிய முதியவர், இது குறித்த அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்கு பதிவு செய்து ராஜாமணியை கைது செய்தார். இவர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory