» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை : 4 போ் கைது - 2 பைக்குகள் பறிமுதல்

சனி 27, ஏப்ரல் 2024 8:16:25 AM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட4 பேரை போலீசார் கைது செய்து, 650 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி வடபாகம் போலீசார் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு இளைஞரை பிடித்து விசாரித்தில், முத்துநகரைச் சோ்ந்த கணேசன் மகன் இசக்கிபாலன் (21), விற்பனைக்காக தனது பைக்கில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், சுமாா் 200 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீசார் புதுக்கோட்டை சுற்றுவட்டாரங்களில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெரியநாயகிபுரம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் தென்னரசு என்ற மாரிசெல்வம் (20), கோரம்பள்ளம் பி.எஸ்.பி. நகரைச் சோ்ந்த அருணாசலம் மகன் காளிரத்தினம் (27), மாரமங்கலத்தைச் சோ்ந்த ஆதி மகன் செந்தூா் பாண்டி(30) ஆகியோா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்ததனர். அவா்களிடமிருந்து சுமாா் 450 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ரூ.3,900 ரொக்கம், ஒரு கத்தி, 2 மோட்டாா் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory