» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் பேரணி: வாரத்தில் 5 நாட்கள் வேலையை அமல்படுத்த கோரிக்கை

வெள்ளி 23, ஜனவரி 2026 8:24:55 AM (IST)



தூத்துக்குடியில் வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த கோரி வங்கி ஊழியர்கள் பேரணி நடத்தினர்.

வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பதை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் வங்கி ஊழியர்களின் கோரிக்கை பேரணி நேற்று மாலையில் நடந்தது. தூத்துக்குடி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி தெற்கு பீச் ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு முடிவடைந்தது.

இந்த பேரணிக்கு பாரதஸ்டேட் வங்கி ஊழியர் சங்க உதவி பொதுச் செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் மெல்பர் சேவியோ, அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராமசுப்பிரமணியன், கனராவங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ஜெயராம், தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ராஜாஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் பங்கேற்ற ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பதாகை ஏந்தி சென்றனர். பேரணியில் வங்கி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory