» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அமமுக முன்னாள் துணை பொதுச்செயலாளார்!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:07:06 AM (IST)
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா,திமுகவில் இன்று காலை இணைந்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தீவிர களப்பணியாற்றி வருகின்றன. இந்தச் சூழலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) அமமுக இணைந்தது. இந்தக் கூட்டணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அமமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார். அவருடன் அமமுக மாவட்டச் செயலாளர்கள் மூவர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவருடன் தென்மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்க ராஜா, "தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வில் இணைந்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது, 8 ஆண்டுகள் கஷ்டபட்டு வளர்த்த அ.ம.மு.க.வை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அ.ம.மு.க. தலைமை கேட்கவில்லை.
பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விருப்பப்படி தி.மு.க.வில் இணைந்துள்ளோம். 3 மாவட்ட செயலாளர்கள் தற்போது வந்துள்ளார்கள். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையில் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறி உள்ளோம்” என்று கூறினார்.
முன்னதாக மாணிக்கராஜா இன்று காலை திமுகவில் இணைவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அமமுக-வின் கட்டுப்பாட்டை மீறிய காரணத்துக்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்குவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தீவிர களப்பணியாற்றி வருகின்றன. இந்தச் சூழலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) அமமுக இணைந்தது. இந்தக் கூட்டணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார். அவருடன் அமமுக மாவட்டச் செயலாளர்கள் மூவர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவருடன் தென்மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்க ராஜா, "தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வில் இணைந்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது, 8 ஆண்டுகள் கஷ்டபட்டு வளர்த்த அ.ம.மு.க.வை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அ.ம.மு.க. தலைமை கேட்கவில்லை.
பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விருப்பப்படி தி.மு.க.வில் இணைந்துள்ளோம். 3 மாவட்ட செயலாளர்கள் தற்போது வந்துள்ளார்கள். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையில் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறி உள்ளோம்” என்று கூறினார்.
முன்னதாக மாணிக்கராஜா இன்று காலை திமுகவில் இணைவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அமமுக-வின் கட்டுப்பாட்டை மீறிய காரணத்துக்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்குவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி உப்பளங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரம்: 25 லட்சம் டன் உப்பு உற்பத்திக்கு இலக்கு
வெள்ளி 23, ஜனவரி 2026 3:56:03 PM (IST)

தைப்பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் : இந்து முன்னணி கோரிக்கை!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:19:39 PM (IST)

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீத்தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:13:56 PM (IST)

தன்பாடு உப்பு தொழிலாளர்கள் சங்க கட்டிடம் திறப்பு விழா : மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
வெள்ளி 23, ஜனவரி 2026 3:03:15 PM (IST)

தூத்துக்குடியில் 16வது தேசிய வாக்காளர் தினம் : ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 23, ஜனவரி 2026 12:11:06 PM (IST)

தூத்துக்குடியில் ஐஏஎஸ் பயிற்சி மையம் அடிக்கல் நாட்டுவிழா!
வெள்ளி 23, ஜனவரி 2026 10:38:14 AM (IST)








