» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீத்தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி!

வெள்ளி 23, ஜனவரி 2026 3:13:56 PM (IST)



தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீத்தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் சிப்காட் தீயணைப்பு-மீட்புப் பணி நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் தீத்தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி மற்றும் போலி ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. 

இதில், போக்குவரத்து அலுவலர் புன்னவன கட்டி மற்றும் ஏட்டு இசக்கிராஜன், ராம்குமார், ஜெயக்குமார், அஜித், விஸ்வநாதன் ஆகிய வீரர்கள்  தீயணைப்பான்களை பயன்படுத்தி தீயை அணைப்பது குறித்தும், காயமடைந்தவர்களை மீட்பது குறித்தும் செயல்முறை பயிற்சியை செய்து காட்டினர். நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், பணியாளர்கள், ஓட்டுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory