» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வனங்களை உருவாக்க கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 5:12:35 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் விதைப்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் விதைப்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் அருண் குமார் மற்றும் கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் கலந்து கொண்டு விதை பந்துகளால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார். கல்லூரி மாணவ மாணவியருக்கு விதை பந்துகள் பற்றியும், அதன் மகத்துவம், எவ்வாறு தயாரிப்பது, விதை பந்துகள் செய்ய தேவையான மர விதைகளை எப்படி சேகரிப்பது, ஏன் இந்தியாவின் தென் முனைக்கு மழை தேவை என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
கல்லூரி மாணவர்கள் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தி வீணாக்கக் கூடிய எலுமிச்சை, சப்போட்டா, சீதா, புளி, வேம்பு, பேரிச்சை ஆகிய விதைகளை சேகரித்து 1,00,000 விதைப்பந்துகளாக உருவாக்க வேண்டுமென்று எஸ்.எஸ். டி.எம் கல்லூரி மாணவர்கள் உறுதி ஏற்றனர். முன்னதாக, கல்லூரி வளாகத்தில் மாணவியர்கள் கோகிலா, குமுத மலர், மற்றும் மரிய சந்தியா ஆகியோர் அரச மரக்கன்று நட்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரி மாணவி திவ்யஜோதி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நல பணி திட்ட அலுவலர் ஜெய் சிங், கல்லூரி பேராசிரியர்கள் செல்வ லட்சுமி, கனகபிரபா, ரமேஷ், ஆனந்த் குமார் மற்றும் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் தலைவர் ஹரிகரசுதன் ஆகியோர் செய்திருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் விதைப்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் அருண் குமார் மற்றும் கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் கலந்து கொண்டு விதை பந்துகளால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார். கல்லூரி மாணவ மாணவியருக்கு விதை பந்துகள் பற்றியும், அதன் மகத்துவம், எவ்வாறு தயாரிப்பது, விதை பந்துகள் செய்ய தேவையான மர விதைகளை எப்படி சேகரிப்பது, ஏன் இந்தியாவின் தென் முனைக்கு மழை தேவை என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
கல்லூரி மாணவர்கள் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தி வீணாக்கக் கூடிய எலுமிச்சை, சப்போட்டா, சீதா, புளி, வேம்பு, பேரிச்சை ஆகிய விதைகளை சேகரித்து 1,00,000 விதைப்பந்துகளாக உருவாக்க வேண்டுமென்று எஸ்.எஸ். டி.எம் கல்லூரி மாணவர்கள் உறுதி ஏற்றனர். முன்னதாக, கல்லூரி வளாகத்தில் மாணவியர்கள் கோகிலா, குமுத மலர், மற்றும் மரிய சந்தியா ஆகியோர் அரச மரக்கன்று நட்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரி மாணவி திவ்யஜோதி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நல பணி திட்ட அலுவலர் ஜெய் சிங், கல்லூரி பேராசிரியர்கள் செல்வ லட்சுமி, கனகபிரபா, ரமேஷ், ஆனந்த் குமார் மற்றும் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் தலைவர் ஹரிகரசுதன் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாட்கோ மூலம் கேட்டரிங் டெக்னாலஜி பயிற்சி : மாணாக்கர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 3:29:37 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நாய் கடித்து 14 பணியாளர்கள் காயம்!
வெள்ளி 6, மார்ச் 2026 3:22:22 PM (IST)

ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்து வ.உ.சி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 6, மார்ச் 2026 11:29:00 AM (IST)

துணை முதல்வர் உதயநிதி நாளை தூத்துக்குடி வருகை: ரூ.300 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம்!
வெள்ளி 6, மார்ச் 2026 11:17:52 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 14-ல் தேசிய மக்கள் நீதிமன்றம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:12 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் கோவிலில் ரூ.1.28 கோடியில் புதிய தேர் : பூமிபூஜையுடன் பணிகள் தொடக்கம்
வெள்ளி 6, மார்ச் 2026 8:32:59 AM (IST)









