» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 14-ல் தேசிய மக்கள் நீதிமன்றம்!

வெள்ளி 6, மார்ச் 2026 8:39:12 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா தலைமையகங்களில் வரும் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. 

இது குறித்து தூத்துக்குடி மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஆர். வசந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய மற்றும் மாநிலச் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில், மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

தூத்துக்குடியில் 6 அமர்வுகள், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரில் தலா 2 அமர்வுகள், விளாத்திகுளம், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரத்தில் தலா 1 அமர்வு நடைபெறும். 

இந்த மக்கள் நீதிமன்றத்தில் சமாதானமாகச் செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி மற்றும் வங்கி கடன் தொடர்பான வழக்குகள் மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட (குடும்ப நல) வழக்குகள் சமரசத் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்:

எனவே, இந்தத் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்காளிகள், எதிர் வழக்காளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது வழக்குகளுக்கு விரைந்து தீர்வு கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory