» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மினி பஸ் டிரைவரை தாக்கிய 2பேர் கைது

புதன் 14, ஜனவரி 2026 3:57:03 PM (IST)

தூத்துக்குடியில் மதுபோதையில் தகராறு செய்து மினி பஸ் டிரைவரை தாக்கிய 2பேரை போலீசார் கைது செய்தனர். 

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி மகன் கார்த்திக் (22), இவர் தூத்துக்குடியில் மினி பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை 05.30 மணியளவில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மினிபஸ் தாளமுத்து நகர் நோக்கி சென்றபோது 2பேர் குடிபோதையில் மினி பஸ்ஸின் படிக்கட்டில் தொங்கி பிரச்சனை செய்துள்ளனர்.

இதனை கார்த்திக் கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் கண்டக்டரை தாக்கியுள்ளனர். இது குறித்து கார்த்திக் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 8மணி அளவில் 2 பேரும் அரிவாளுடன் குறிஞ்சி நகரில் பஸ் டிப்போவில் பிரச்சனை செய்துள்ளனர். 

இது தொடர்பாக டிப்போ மேனேஜர் லிங்கப்பன் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோயில்பிள்ளை விளை, கலைஞர் நகரைச் சேர்ந்த வெள்ளைசாமி மகன் முத்து மாரியப்பன் (20) மற்றும் ஆரோக்கியபுரம் ஐயர்விளை ஆதிமுத்து தினேஷ் (22) ஆகிய 2பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory