» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் திரவியபுரத்தில் என்எஸ்எஸ் நிறைவு விழா

வெள்ளி 15, மார்ச் 2024 10:23:08 AM (IST)



நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் திரவியபுரத்தில் என்எஸ்எஸ் நிறைவு விழா நடந்தது. 

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலம் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் நாசரேத் அருகே உள்ள திரவியபுரத்தில் 7 நாட்கள் நடந்தது. இதையடுத்து முகாமின் நிறைவு விழா நடந்தது. நாசரேத் கைத்தொழில் பாடசாலை முதல்வர் ஸ்டீபன் ஆரம்ப ஜெபம் செய்தார்.

தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை இயக்குனரும்,திருமறையூர் மறுரூப ஆலய சேகர தலைவருமான ஜான் சாமுவேல் மரம் நடுதலும், நெகிழித்தாள்களின் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கோல்டா சாமுவேல், ஊர் தலைவர் ஞானமலை, அசன கமிட்டி தலைவர் ரவி மற்றும் ஊர் மக்கள், ஆசிரியர்கள் ,நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 

கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல லே செயலாளரும், கல்லூரி தாளாளருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், பர்சார் தனபால், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ் மற்றும் ஆசிரியர்கள் , அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory