» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு மன்றம் துவக்க விழா!

புதன் 24, ஏப்ரல் 2024 4:52:53 PM (IST)


தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு மன்றத் துவக்க விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியும், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையும் இணைந்து அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டக் கல்வி நிறுவனங்களில் முதன் முறையாக குழந்தைகள் பாதுகாப்பு மன்றத் துவக்க விழாவினை இன்று நடத்தினர்.

கல்லூரியின் கல்வியியல்துறை உதவிப்பேராசிரியர்  ஸ்.எமிமா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர்  அ.ஜாய்சிலின் ஷெர்மிலா தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலுவலர் எல்.அலெக்ஸ்  தொடக்க உரையாற்றினார். குழந்தைகள் நலக்குழு தலைவர் ரூபன்கிஷோர்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும்,வழிமுறைகளையும் குறித்து சிறப்புரையாற்றினார். 

இளங்கலை கல்வியியல் முதலாண்டு மாணவி ஜெசிசம்சுதீன் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி செயலர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரின் ஆலோசனையின்படி உதவிப்பேராசிரியையும, மன்ற ஒருங்கிணைப்பாளருமான  ஸ்.எமிமா செய்திருந்தார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory