» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி ஆரம்பகால மாணவர்கள் கூடுகை!

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 8:57:07 AM (IST)



நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி ஆரம்ப கால மாணவர்கள் கூடுகை  நடை பெற்றது.     
                              
நாசரேத், ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி துவங்கிய வருடத்தில் முதன் முதலில் பயின்ற மாணவர்கள் 25ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து அம்மாணவர்களின் கூடுகை  நடைபெற்றது.  தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல லே செயலரும் கல்லூரியின் தாளாளருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் முதன்மை உரை நிகழ்த்தினார். 

சிறப்பு விருந்தினராக சென்னை கிங்ஸ் மருத்துவ கல்லூரி இயக்குனரும்  பாலிடெக்னிக் கல்லூரி துவக்க காலத்தில் முதல்வராக பணியாற்றியவருமான குமார் சார்லி பால் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேசினர். கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ்  ஞானதாசன் நன்றி கூறினார். 

விழாவில் கல்லுரி ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களின் குடும் பத்தினர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான  ஏற்பாட்டினை முன்னாள் மாணவர்கள் சுரேஷ், ஆனந்த், கதிர்வேல்ராஜா, கந்தசாமி,  லிவிங்ஸ்டன் நவராஜ்  மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory