» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் 263 வது விழா

திங்கள் 29, ஏப்ரல் 2024 10:38:25 AM (IST)



தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் 263 வது விழா நடைபெற்றது.

தமிழ் இலக்கிய பேரவை பொருளாளர் அருள்செல்வம் இறை வணக்கம் பாடினார். செய்யது முகம்மது ஷெரிப் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர், இலக்கிய பேரவை தலைவர் துறை கணேசன் தலைமை தாங்கினார். திருக்குறளார் தனபாலன் முன்னோடிகளை நினைவு கூறுதல் நடைபெற்றது. புலவர் சத்ய ஞானராஜ், பேராசிரியர் விஸ்வாசம், பேராசிரியர் ஜெய் சிங், இளவல்கள், ஞான அசோக், ஆல்வின் தென்னன் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர். 

விழாவில் காரப்பேட்டை நாடார் மகமை தலைவர் நடராஜன், காரப்பேட்டை நாடார் மகமை பொருளாளர் மதியழகன், புலவர் சங்கரலிங்கம், சூரியன் பண்பலை முன்னாள் அறிவிப்பாளர் சுதர்சனா, சிரிக்கலாம் வாங்க ராஜதுரை, ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஆதி அருமை நாயகம் ஆகியோர்.  ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினர். தமிழ் இலக்கிய பேரவை செயலாளர் மாணிக்கவாசகம் நன்றி உரையாற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory