» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

எட்டயபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா

புதன் 13, மார்ச் 2024 4:25:11 PM (IST)

எட்டயபுரம், பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெகனிக் கல்லூரியில் மகளிர் தின விழா முதல்வா க.பேபிலதா  தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் அனைத்து துறைத்தலைவர்கள், விரிவுரையாளாகள், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள், அனைத்து துறை மாணவிகள் கலந்து கொண்டனர். மூன்றாமாண்டு மாணவி வரவேற்புரை வழங்கினார். 

விழாவில் முதல்வர்  தலைமை உரையாற்றி சிறப்பித்ததோடு பெண் விரிவுரையாளர்கள், அலுவலக பணியார்களுக்கு நினைவு பரிசு வழங்கியதோடு மாணவிகளுக்கும் நினைவு பரிசினை வழங்கினார். விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு ஆடை தொழில்நுட்பவியல் மாணவிகள் நடத்திய பேஷன் ஷோ மற்றும் மாணவிகள் தாங்களே உருவாக்கிய ஆடை அணிகலன்களின் கண்காட்சியும் இடம் பெற்றது. 

விழா நிகழ்ச்சிகளை மூன்றாமாண்டு மாணவிகள் தொகுத்து வழங்கினர். இறுதியாக விழா ஏற்பாடுகளை செய்த ஆங்கில விரிவுரையாளர் வெ.ஜெயசுதா நன்றியுரை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory