» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

வெள்ளி 1, செப்டம்பர் 2023 8:45:23 PM (IST)



கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இடைநின்ற மாணவிகளை கண்டறிந்து கல்வியை தொடர வைத்திடவும், சிறுதானிய உணவு திருவிழா நடத்திடவும்,பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு மேலாண்மை குழு தலைவர் ரெங்கம்மாள்தலைமை வகித்தார்.

நகர் மன்ற உறுப்பினர்கள் சித்ராதேவி, உலகராணிஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆசிரியர் உறுப்பினர் கண்ணன் வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா கூட்டத்தை வழிநடத்தினார்.
கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் 19 நபர்கள் கலந்துகொண்டனர். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் முத்து முருகன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory