» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

கோவில்பட்டி அருகே உள்ள சாத்தூர் வட்டம் என். சுப்பையாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முனியப்பன் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் இராஜசேகர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் "நல்ல பிள்ளைகளைப் பெரிதும் உருவாக்குவது வீடா? நாடா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தின் நடுவராக நாடார் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்ஜான் கணேஷ் பணியாற்றினார்.
வீடே என்ற அணியில், விநாயக சுந்தரி, முருகேசன் ஆகியோரும், நாடே என்ற அணியில் கிருஷ்ணன், செல்வம் ஆகி போரும் வாதிட்டனர். முடிவில், நல்ல பிள்ளைகளைப் பெரிதும் உருவாக்குவது நாடே என்ற முடிவினை நடுவர் அறிவித்தார். நிகழ்ச்சியில், முன்னாள் வேளாண் ஆசிரியர் சுரேஷ்குமார், சகாராவைத் தாண்டாத ஒட்டகம் கல்வி நிறுவனர் தினகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:38:16 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)


