» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்கள் சாதனை!

வெள்ளி 25, ஆகஸ்ட் 2023 3:11:00 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப்பள்ளி வேளாண் தொழிற்கல்வி பிரிவில் (2022-2023)பயின்ற மாணவர் தினேஷ் ராஜன்  திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையிலுள்ள அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை கால்நடை மருத்துவ பட்டப் படிப்பு ( பி.வி.எஸ்.சி.) பயில தேர்வாகியுள்ளார்.
       
இதேபோன்று மாணவர் ஹமீது ஜசிம் ஹக்  திருச்சியிலுள்ள அரசு அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ட்சி நிலையத்தில் இளங்கலை வேளாண்மை ( பி.எஸ்.சி. அக்ரி ) பட்டப் படிப்புக்கு தேர்வாகியுள்ளார்.தேர்வாகியுள்ள மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும்  மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளி தாளாளர் எஸ் சுதாகர், தலைமை ஆசிரியர் எ.கென்னடி வேதராஜ், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலக ஊழியர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory