» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கச்சனாவிளை புனித மரியன்னை பள்ளியில் மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்!

வியாழன் 17, ஆகஸ்ட் 2023 5:08:29 PM (IST)

நாசரேத் கச்சனாவிளை புனித மரியன்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை ஊராட்சி மன்ற தலைவர் கிங்ஸ்டன் வழங்கினார்.

நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளை புனித மரியன்னை பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின த்தை முன்னிட்டு மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கச்சனாவிளை ஊராட்சி மன்ற தலைவர் கிங்ஸ்டன் தலைமை வகித்து தேசிய கொடி யேற்றி மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) ஆரோக்கிய சுபா வரவேற்றார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதில் ஆசிரிய பெருமக்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory