» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா!

திங்கள் 10, ஜூலை 2023 5:00:29 PM (IST)



கோவில்பட்டியில் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழுவின் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது

கோவில்பட்டி புது கிராமம் இல்லத்தார் நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற இவ்விழாவிற்கு இல்லத்தார் சமுதாய சங்கத் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு பொருளாளர் இன்ஜினியர் மாரிக்கண்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் சங்கர் வரவேற்றார்.

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை முருக சரஸ்வதி,பொதுநல மருத்துவமனை மருத்துவர் வேலம்மாள்,துணை வட்டாட்சியர் பொன்னம்மாள்,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன்,ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினர்.

இந்நிகழ்ச்சியில்இல்லத்தார் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பாரதி,நிர்மலா, சித்ரா, கலைஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு நிர்வாகிகள் வெங்கடேஸ்வரன், கோமதி சங்கர், ஜெயக்குமார்,கோபால கிருஷ்ணன், தினேஷ் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு ஆலோசகர் திருப்பதி கணேசன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory