» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை!

வியாழன் 16, மார்ச் 2023 3:19:30 PM (IST)



தேசிய அளவில் காகித விளக்கு காட்சியில் நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர். 

திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் புதுமை மற்றும் யோசனைப் போட்டி விளக்கக் காட்சி (innovation & idea contest presentation) நடைபெற்றது. தேசிய அளவில் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறை மாணவர்கள் கிறிஸ்டன் மற்றும் அகமது ஆகியோர் முதலிடம் பிடித்தனர். 

மேலும், கணினி துறை மாணவர்கள் அருண், கவுதம், அபி ஷேக், மேசாக் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி தாளாளரும் தூத்துக்குடி நாசரேத் திரும ண்டலலேசெயலாளருமான நீகர் பிரின்ஸ் கிப்சன், கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சர் தனபால் மற்றும் ஆசிரியர்கள், மாண வர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory