» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

சனி 25, ஜூலை 2026 5:26:23 PM (IST)

உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் கொடி பவனியை ஒட்டி, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா நாளை (ஜூலை 26) விமர்சையாகக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழாவின் முக்கியத் தொடக்க நிகழ்வான கொடி பவனி இன்று மாலை தூத்துக்குடி நகரப் பகுதிகளில் கோலாகலமாக நடைபெறுகிறது.

இந்தக் கொடி பவனி மற்றும் திருவிழா நிகழ்வுகளில் பங்கேற்கும் பொருட்டு, தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் விடுமுறை விடுத்துள்ளனர். இதன் காரணமாக, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் மீன்பிடித் துறைமுகப் பகுதி இன்றைக்குச் சற்றே வெறிச்சோடி காணப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory