» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் செயற்கை கால் அளவீடு முகாம்

சனி 25, ஜூலை 2026 12:43:29 PM (IST)

DCWcamp.jpg

சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவன வளாகத்தில் செயற்கை கால் அளவீடு முகாம் நடைபெற்றது. இதில் 70 பயனாளிகள் பங்குபெற்றனர். 

சென்னை எஸ்சி அகர்வால் அறக்கட்டளை, சாகுபுரம் டி.சி.டபிள்யூ லிமிடெட் நிறுவனம் சார்பில் டி.சி.டபிள்யூ வளாகத்தில் செயற்கை கால் அளவீடு முகாம் நடைபெற்றது. முகாமை டி.சி.டபிள்யூ லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ். சுரேஷ், தொடங்கி வைத்தார். 

நிகழ்சிக்கு எஸ். சி. அகர்வால் அறக்கட்டளையின் முகாம் அமைப்பாளர் என்.வி. சம்பத், ஒருங்கிணைப்பாளர்கள் சஞ்சீவ் அகர்வால் மற்றும் ஜான் வில்லியம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ அங்காள அகிலாண்டேஸ்வரி அமைப்பை சேர்ந்த ஜே. சந்திர மௌலி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். 

DCWCAmpi4i.jpg

இந்த முகாமில் செயற்கை கால் பொருத்துவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 70 பயனாளிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.சி.டபிள்யூ லிமிடெட் நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் வழிகாட்டலின் பேரில் மக்கள் தொடர்புத் துறையினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory