» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : சுற்றுலாத்துறை இயக்குநர் நேரில் ஆய்வு!

சனி 25, ஜூலை 2026 3:11:25 PM (IST)

TourismTcr.jpg

திருச்செந்தூரில் ரூ.பல கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சுற்றுலா இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தமிழ்நாடு சுற்றுலா மாளிகை வளாகத்தில் இன்று சுற்றுலாத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சுற்றுலா இயக்குநர்/சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் தொல்லியல் துறை இயக்குநர்  வீ.ப.ஜெயசீலன், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு சுற்றுலா மாளிகை வளாகத்தில் தனியார் முதலீடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம்  40 அறைகள் 100 நபர்கள் அமரும் வகையில் கூட்டரங்கம் கட்டப்படவுள்ள திட்ட பணிகளையும், அதேபோல் மனப்பாடு கிராமத்தில் தனியார் முதலீடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் கட்டப்படவுள்ள திட்டப் பணிகளை அவர்கள், பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இந்நிகழ்வில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீத்தாராமன், திருச்செந்தூர் வட்டாட்சியர் தங்கமாரி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory