» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தினர் குண்டுகட்டாகக் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!

வெள்ளி 24, ஜூலை 2026 3:22:26 PM (IST)

MaadharSAngamArrest.jpg

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் காத்திருப்பு போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு முழு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி. சுனில் குமார் தலைமையிலான காவல்துறையினர், இப்போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அங்கிருந்து கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர். ஆனாலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால், காவல்துறையினர் பெண்களைப் பலவந்தமாக அப்புறப்படுத்தினர். 

இதில் சில பெண்களைக் காவல்துறையினர் தூக்கிச் சென்றும், வலுக்கட்டாயமாகப் பிடித்துக் காவல் வாகனத்தில் ஏற்றியும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் கடும் பரபரப்பான சூழல் நிலவியது. இந்தக் காத்திருப்பு போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜானகி தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் பூமயில் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory