» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவிகள் கருப்பு உடை அணிந்து போராட்டம்!

வெள்ளி 24, ஜூலை 2026 3:58:42 PM (IST)

stmarystudentsprotest.jpg

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, தூத்துக்குடி  மகளிர் கல்லூரியில் மாணவிகள் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில மாணவிகள் கருப்பு உடை அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான மாணவிகள் கருப்பு நிற உடை அணிந்து வந்து தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

கல்லூரி வளாகத்திற்குள் ஒன்றுதிரண்ட 2,000-க்கும் மேற்பட்ட மாணவிகள், மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், அவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உடனடியாக உறுதி செய்ய வலியுறுத்தியும் தீவிரமாக முழக்கங்களை எழுப்பினர். மேலும், தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வாசகங்கள் மற்றும் மாணவர் உரிமைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory