» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

சனி 18, ஜூலை 2026 8:32:32 PM (IST)

தூத்துக்குடி எட்டயபுரம் சாலைப் பகுதியில், சட்டவிரோத விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்த வாலிபரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலைப் பகுதியில், சட்டவிரோதப் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மேரிஜெமிதா தலைமையில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அப்போது, எட்டயபுரம் சாலையில் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற, தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சேர்ந்த அப்துல்கனி மகன் முகமது இஸ்மாயில் (26) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory