» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு: போலீசாருக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு
சனி 18, ஜூலை 2026 3:53:20 PM (IST)
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் 8 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல் துறையினருக்கு நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டுத் தெரிவித்தார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கஞ்சா கடத்தல் வழக்கில், கடத்தலில் ஈடுபட்ட எதிரிகளைக் கைது செய்து அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பிரிவினருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் துரிதமாகச் செயல்பட்ட தாளமுத்துநகர் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர்கள் டேவிட்ராஜன், சண்முகையா, சுடலைமணி, பொன்ராம் மற்றும் பொன்ராஜ் ஆகியோரைத் திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்துத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான இத்தகைய துறைசார்ந்த நடவடிக்கைகள் மற்றும் குற்றத் தடுப்புப் பணிகளைத் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

தூத்துக்குடியில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ பொருட்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 9:27:40 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடி பவனி கோலாகலம்!
சனி 25, ஜூலை 2026 9:19:22 PM (IST)

பருவமழைக்கு முன் பாசனக் கால்வாய்கள், குளங்களை சீரமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!
சனி 25, ஜூலை 2026 8:18:31 PM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சனி 25, ஜூலை 2026 5:26:23 PM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் குடும்பத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் தொலைபேசியில் ஆறுதல்!
சனி 25, ஜூலை 2026 4:40:37 PM (IST)








