» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு: போலீசாருக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு

சனி 18, ஜூலை 2026 3:53:20 PM (IST)

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் 8 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல் துறையினருக்கு நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டுத் தெரிவித்தார். 

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கஞ்சா கடத்தல் வழக்கில், கடத்தலில் ஈடுபட்ட எதிரிகளைக் கைது செய்து அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பிரிவினருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கில் துரிதமாகச் செயல்பட்ட தாளமுத்துநகர் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர்கள் டேவிட்ராஜன், சண்முகையா, சுடலைமணி, பொன்ராம் மற்றும் பொன்ராஜ் ஆகியோரைத் திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்துத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். 

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான இத்தகைய துறைசார்ந்த நடவடிக்கைகள் மற்றும் குற்றத் தடுப்புப் பணிகளைத் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory