» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஆதார் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அஞ்சல்துறை அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:30:02 PM (IST)
தூத்துக்குடி இரயில் நிலைய தபால் சேவை மையத்தில் புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சல்துறை அழைப்பு விடுத்துள்ளது.
தூத்துக்குடி இரயில் நிலைய தபால் சேவை மையத்தில் (RMS), கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த மையத்தில் புதிய ஆதார் பதிவு, பெயர், முகவரி, பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களைப் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், குழந்தைகளுக்கான ஆதார் பதிவு மற்றும் பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி, புகைப்படம்) புதுப்பித்தல் உள்ளிட்ட ஆதார் சார்ந்த பல்வேறு சேவைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
பொதுமக்கள் தங்களின் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைச் செலுத்தி இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் தொலைதூரம் செல்ல வேண்டிய அவசியமின்றி, தங்களது ஆதார் விபரங்களை இம்மையத்தில் திருத்தம் செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே தபால் சேவை மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

தூத்துக்குடியில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ பொருட்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 9:27:40 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடி பவனி கோலாகலம்!
சனி 25, ஜூலை 2026 9:19:22 PM (IST)

பருவமழைக்கு முன் பாசனக் கால்வாய்கள், குளங்களை சீரமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!
சனி 25, ஜூலை 2026 8:18:31 PM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சனி 25, ஜூலை 2026 5:26:23 PM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் குடும்பத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் தொலைபேசியில் ஆறுதல்!
சனி 25, ஜூலை 2026 4:40:37 PM (IST)








