» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஆதார் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அஞ்சல்துறை அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:30:02 PM (IST)
தூத்துக்குடி இரயில் நிலைய தபால் சேவை மையத்தில் புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சல்துறை அழைப்பு விடுத்துள்ளது.
தூத்துக்குடி இரயில் நிலைய தபால் சேவை மையத்தில் (RMS), கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த மையத்தில் புதிய ஆதார் பதிவு, பெயர், முகவரி, பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களைப் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், குழந்தைகளுக்கான ஆதார் பதிவு மற்றும் பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி, புகைப்படம்) புதுப்பித்தல் உள்ளிட்ட ஆதார் சார்ந்த பல்வேறு சேவைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
பொதுமக்கள் தங்களின் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைச் செலுத்தி இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் தொலைதூரம் செல்ல வேண்டிய அவசியமின்றி, தங்களது ஆதார் விபரங்களை இம்மையத்தில் திருத்தம் செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே தபால் சேவை மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:10:40 PM (IST)

தவெக அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது: சட்டமன்றத்தில் மார்க்கண்டேயன் விமர்சனம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:18:42 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 55-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:12:51 PM (IST)

கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:49:28 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:23:03 PM (IST)








