» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 4பேர் கைது!
வெள்ளி 10, ஜூலை 2026 8:15:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்த்தில் திருச்செந்தூர் மற்றும் கடம்பூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிதம்பராபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகக் கடம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவீந்திரன் வழக்குப் பதிவு செய்து, சிதம்பராபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் (43) என்பவரைக் கைது செய்தார். அவரது பெட்டிக்கடையிலிருந்து 5 கிலோ எடை கொண்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தளவாய்புரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 இளைஞர்களைத் திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சோனியா வழக்குப் பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்தார். கைது செய்யப்பட்டவர்கள் தளவாய்புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (20), சீருடையார்புரத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (20) மற்றும் ஆறுமுகநேரியைச் சேர்ந்த தினேஷ் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 6 கிலோ 400 கிராம் எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களின் சுயலாபத்திற்காகப் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்து விற்கும் நபர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

30 ஆண்டுகளாக 300 ஸ்டார் ஹோட்டல்களில் நூதன மோசடி: தூத்துக்குடி நபர் ஒடிசாவில் கைது!
வெள்ளி 10, ஜூலை 2026 5:38:14 PM (IST)

தூத்துக்குடியில் நாய் மீது கல்வீசிய விவகாரத்தில் மோதல்; இருவருக்குப் போலீஸ் வலை!
வெள்ளி 10, ஜூலை 2026 5:11:46 PM (IST)

இ-கேசிசி மூலம் வட்டியில்லாப் பயிர்க்கடன் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 10, ஜூலை 2026 4:41:27 PM (IST)

தூத்துக்குடியில் ஜூலை 14-ஆம் தேதி மின்நிறுத்தம்!
வெள்ளி 10, ஜூலை 2026 4:22:53 PM (IST)

பால்பாண்டி நகரில் உடனடியாக தார் சாலை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
வெள்ளி 10, ஜூலை 2026 4:17:53 PM (IST)

தவெகவில் இணையுமாறு மிரட்டல்? திமுக ஏம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் போலீஸ் விசாரணை!
வெள்ளி 10, ஜூலை 2026 4:05:21 PM (IST)








